விண்வெளி வீரர்களுக்கு உணவு தயாரிக்கப் பயன்படும் கடல் பாசியை
(ஸ்பைரூலினா), தலைவாசல் பகுதி விவசாயிகள் பண்ணை அமைத்து வளர்த்து
வருகின்றனர். தமிழகத்தில் சில ஆண்டுகளாக பருவ கால நிலையில் ஏற்பட்டுள்ள
மாற்றத்தால் மழையின்மை, வெள்ளம் போன்றவை மாறி மாறி வருகிறது. மழையின்மையால்
ஏற்படும் வறட்சி காரணமாக நெல், கரும்பு, வாழை போன்ற நன்செய் பயிர்களை
உற்பத்தி செய்ய முடியாத நிலைக்கு விவசாயிகள் தள்ளப்பட்டுள்ளனர்.
விவசாயம் சார்ந்த கோழிப்பண்ணை, பட்டுப்பண்ணை, மூலிகை பயிர் சாகுபடி என
பல்வேறு தொழில் செய்வதில் விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர். குறிப்பாக
விண்வெளி வீரர்களுக்கு உணவு தயாரிக்கப் பயன்படும் கடல்பாசி (ஸ்பைரூலினா)
வளர்ப்பில் விவசாயிகளுக்கு ஆர்வம் அதிகரித்துள்ளது.
More READ
More READ
No comments:
Post a Comment